அறிவிப்புகள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினையை23.10.2009 அன்று வெளியிட்டார்கள். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கோவை 'கொடிசியா' அரங்கு தகுதியான இடம் என 09.11.2009அன்று அறிவித்துள்ளார்கள். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ் இணைய மாநாடும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்தப்படும் என்று 12.11.2009 அன்று அறிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழ் நாடு மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான ஆய்வரங்க அமைப்புக்குழுவை அமைத்து23.10.2009 அன்று ஆணை வெளியிட்டார்கள்.

